• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் வழங்கிய கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன்

April 8, 2020 தண்டோரா குழு

கோவை – கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்டத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து பாரட்டுக்களை தெரிவித்தும், ரூ25 ஆயிரம் மதிப்புள்ள முககவசங்களை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார பணியாளர்களின் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது. இத்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முககவசங்களை தருவித்து மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள தூய்மை தொழிலாளர்களுக்கு புதனன்று நேரில் வழங்கினார்.

மேலும் அவர் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தூய்மைத்தொழிலாளர்களின் ஈடில்லாத உழைப்பை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். உங்கள் சேவையை வெளிப்படையாக பாரட்டும் நிகழ்வு நடந்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடரும் என தான் நம்புவதாகவும், தூய்மைப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுக்க உங்களோடு எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும சிஐடியு துணை நிற்கும். அதேநேரத்தில் உங்களது உடல் நலனை பாதுகாத்துக்கொள்ள உரிய முன்னெச்சரிக்கையோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக துடியலூர், உடையாம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, வடகோவை, புலியகுளம், பீளமேடு, ஒண்டிபுதூர் மற்றும் இருகூர் பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து முககவசங்களை வழங்கினார்.

மேலும் படிக்க