• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு; நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

June 6, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி’ஸ்டெர்லைட்’ லைக்கு எதிராக மே 22ல் நடந்த நுாறாவது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில்,நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய்,மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.அதைப்போல், திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீட்டிற்கும்,சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் அளித்தார்.

இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க