• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் – ஜி.கே.வாசன்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும்,இதற்கு மாநிலஅரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும் காலம் தாழ்த்தமல் மத்திய,மாநில அரசுகள் அந்த ஆலையைக் மூட வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைக் மூட வேண்டும் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினை எனவும் அங்கு இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளைக் அரசு எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாகவும் பொதுமக்களின் நியமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற கூடிய அரசுகள் இனி வருங்காலத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையைக் மூட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் மன நிலையைக் புரிந்து கொள்ள முடியாத அரசாக, இந்த அரசு விளங்குகிறது.தூத்துக்குடி ஆலையைக் மூடுவதற்கு தேவையான விழிப்புணர்வு பணியைக் தமிழ் மாநில அரசு மேற்கொள்ளும்.

மேலும் பெட்ரோல் ,டீசல் விலை வரலாற்று இல்லாத அளவில் உயர்ந்திருக்கிறது.அதற்கான முழு பொறுப்பைக் மத்திய அரசு ஏற்க வேண்டும்.அதே போல் அதற்கான கலால் வரியைக் குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெட்ரோல் ,டீசல் விலையைக் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க