தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும்,இதற்கு மாநிலஅரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும் காலம் தாழ்த்தமல் மத்திய,மாநில அரசுகள் அந்த ஆலையைக் மூட வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைக் மூட வேண்டும் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினை எனவும் அங்கு இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளைக் அரசு எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாகவும் பொதுமக்களின் நியமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற கூடிய அரசுகள் இனி வருங்காலத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையைக் மூட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் மன நிலையைக் புரிந்து கொள்ள முடியாத அரசாக, இந்த அரசு விளங்குகிறது.தூத்துக்குடி ஆலையைக் மூடுவதற்கு தேவையான விழிப்புணர்வு பணியைக் தமிழ் மாநில அரசு மேற்கொள்ளும்.
மேலும் பெட்ரோல் ,டீசல் விலை வரலாற்று இல்லாத அளவில் உயர்ந்திருக்கிறது.அதற்கான முழு பொறுப்பைக் மத்திய அரசு ஏற்க வேண்டும்.அதே போல் அதற்கான கலால் வரியைக் குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெட்ரோல் ,டீசல் விலையைக் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும்”.இவ்வாறு கூறினார்.
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு