• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவையில் இன்றும்,நாளையும் இரண்டு நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சுமார்2 ஆயிரத்து 500 வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால்,கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க