• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோவையில் கடைகள் அடைப்பு

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக முக்கிய வணிக வீதிகளாக உள்ள டவுன்ஹால்,காந்திபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளது.இருப்பினும் மாநகரின் சில இடங்களில் கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது.

மேலும்,தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் வலியிறுத்தினர்.மாவட்டத்தில் 50% கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில்,பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க