March 29, 2019 தண்டோரா குழு
தூத்துக்குடி நகரில் சோதனையின்போது வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 108 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில், தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் நடந்த வாகன சோதனையின் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 108 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் பலத்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும்,ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கம் திருப்பி ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.