• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் சாலை மறியல்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்தும்,துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தியும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில்,துப்பாக்கி சூடு நட்த்திய காவல்துறையினரை கண்டித்தும்,தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும்,அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க