• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது- முதலமைச்சர் பழனிசாமி

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி,

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டு,தடியடி நடத்தியும் மக்கள் ஒத்துழைக்காததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் விரும்ப தகாத சம்பவம் என்றும், சில அரசியல் கட்சி தலைவர்கள் அப்பாவி மக்களை சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட்டுக்கு மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று துண்டித்துள்ளது.தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் சில சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன.மேலும்,எதிர்க்கட்சிகள் மற்றும் சில இயக்கங்கள் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர்.

மேலும் படிக்க