• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணி 90 % நிறைவு”

February 4, 2017 தண்டோரா குழு

சென்னை அருகே கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன எனவும், ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஜனவரி 28-ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தில் 32,813 டன் அளவுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் சென்ற டான் காஞ்சிபுரம் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் டான் காஞ்சிபுரம் கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்து, கடலில் கலந்தது.

இதன் காரணமாக எண்ணெய்ப் படலம் உருவானது . அதனை அகற்றும் பணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் தொடர்ந்து எண்ணெய் கசிவு எற்படுவதை தடுக்க டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த POL (Petroleum, Oil and Lubricant) எண்ணெய் முழுவதுமாக வெள்ளிக்கிழமை வெளியே அகற்றப்பட்டுவிட்டது. கடலில் கொட்டிய எண்ணெயில், இதுவரை 157 டன் அளவுக்கு எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன. எண்ணெய் படலங்களை முழுமையாக அகற்றும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும்“
இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் படிக்க