• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான் – நடிகை பாவனா

February 28, 2017 தண்டோரா குழு

“துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். அவற்றிலிருந்து மீண்டு வருவேன்” என்று நடிகை பாவனா உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.

இது குறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து “இன்ஸ்டாகிராம்” சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பாவனா.

அதில், “வாழ்க்கை என்னைச் சிலமுறை கீழே தள்ளியுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை அது காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான்.ஆனால் ஒன்று, அவற்றிலிருந்து நான் எப்போதும் மீண்டுவருவேன். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க