• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர் ஆய்வு

August 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட துடியலூர் எம்.பி.சி. நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்தும், மேட்டுப்பாளையம் பிரதான சாலை துடியலூர் பி.சி.எஸ் நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் துடியலூர் டவர் லைன் ரோடு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கப்படுவதற்காக போடப்பட்டு வரும் கற்ச்சாலையின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.அதே போல் மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகில் கவுண்டம்பாளையம். வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறுவதை மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க