• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துடியலூர், கணபதி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் கள ஆய்வு

March 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர், கணபதி பகுதி வி.ஜி.ராவ் நகர் மற்றும் வரதராஜலூ நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி சார்பாக சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. துடியலூர், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகின்றது. பொதுமான குடிநீர் இல்லாத காரணத்தினால் வாரம் ஒரு முறை இப்பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இப்பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு கூடுதல் குடிநீர் கிடைக்க மாநகராட்சி சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி கமிஷனர் இன்று நேரில் பார்வையிட்டு இதற்கான கள ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகரப்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (24*7 குடிநீர் திட்டம்) பார்வதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க