March 1, 2019 தண்டோரா குழு
தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாததிற்க்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டிற்க்கு இஸ்லாமிய நாடுகள் முழு ஆதரவாக இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற தேசிய புலனாய்வு அமைப்புக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் நமக்கு ஆதரவாக உள்ளன. இதற்கு உதாரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளதைக் கூறலாம். சில நேரத்தில் தீவிரவாதத்துடன் மதத்தை இணைத்து பேச சிலர் முயற்சிப்பதாகவும், இது சரியல்ல என்று தாம் நினைப்பதாகவும் கூறினார்.
மேலும் தேசிய புலனாய்வு அமைப்புகளின் தீவிர முயற்சியினால் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யப்படுவது வெகுவாக குறைந்துள்ளது ” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.