• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீர்ப்பு குறித்து தலைவர்களின் கருத்து

February 14, 2017 தண்டோரா குழு

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன்.அவர் கூறுகையில்,

“சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவின் முயற்சி தோல்வியடைந்தது. சசிகலாவும், மற்றவர்களும் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் 4 வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது” என்றார்.

அதைப் போல் இந்த வழக்கை பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. கூறுகையில்,

“உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும். இந்த தீர்ப்பு நான் எதிர்பார்த்ததுதான்“ என்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான கர்நாடக மாநிலத்தின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில்,

“சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது. இனி அவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை” என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்:

“பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது”

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்: “சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக் கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது”

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: ““ சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும்”.

நடிகை கவுதமி: “சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ஜெயலலிதாவின் மறைவுக்கும் பதில் சொல்ல வேண்டும்”.

மேலும் படிக்க