• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீர்ப்பு அனுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணம் ஆகவும் இருக்கலாம் -தமிழிசை

June 14, 2018 தண்டோரா குழு

அ.தி.மு.க 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அனுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணம் ஆகவும் இருக்கலாம் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகமே எதிர்பார்ப்பது இன்று மதியம் 1 மணிக்கு வர இருக்கும் 18 எம்.எல்.ஏ க்கள் மீதான தீர்ப்பை தான்.வர கூடிய தீர்ப்பு அனுகுண்டாகவும் இருக்கலாம்,புஷ்வானம் ஆகவும் இருக்கலாம். நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.மேலும், மத்திய அரசை ராகுல் காந்தி எவ்வளவு தான் குறை கூறினாலும் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதாகவும்,பா.சிதம்பரம் அவரது ஆட்சி காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மகன் ஊழல் செய்ய துணை போனதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க