February 16, 2018
தண்டோரா குழு'
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்பில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி.க்கு பதிலாக 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி வழக்கு குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,தீர்ப்பா? தீர்வா? நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்; நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது.தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்; எதிர்கொள்வது மறுபுறம்.என்ன செய்யப் போகிறோம்?எனக் கூறியுள்ளார்.