July 1, 2019
தண்டோரா குழு
தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்கும், பொதுவழிக்கும் இடையே கட்டப்படும் தீண்டாமை சுவர் கட்டும் பணிகளை தடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.
குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கே வடமதுரையில் 50 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான விருத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலைச்சுற்றி நான்கு திசைகளிலும், மதில் சுவர் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் வருகின்ற 11 ஆம் தேதி கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகேயும்,பொதுவழியை ஒட்டியும் 7 அடி உயரத்தில் 300 அடிக்கு இந்த சுவர் கோவில் நிர்வாகத்தால் கட்டப்படுகிறது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் , இந்து கோவிலுக்கும் இடையில் எழுப்பப்படும் தீண்டாமை சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளித்தனர்.