• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் முன் ஜாமின் கோரி மனு

May 2, 2018 தண்டோரா குழு

கோவை கண்ணம்பாளையம் குட்கா ஆலை விவகாரம் தொடர்பாக தலைமறைவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட மூன்று பேர் முன் ஜாமின் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை கண்ணம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கடந்த 27 ஆம் தேதி கோவை மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு,மிரட்டல் விடுத்ததாக எம்.எல்.ஏ உட்பட பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பேர் தலைமறைவாகினர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ காத்திக் உட்பட மூன்று பேரும் முன் ஜாமின் கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க