• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திறப்புவிழா செய்யாத புதிய படிப்பக கட்டிடம் – சீர்வரிசை தட்டுடன் வாலிபர் சங்கம் நூதனமனு

March 19, 2018 தண்டோரா குழு

கோவையில் புதிதாக கட்டப்பட்ட படிப்பக கட்டிடம் இரண்டு ஆண்டுகளாய் திறப்பு விழா செய்யாததை கண்டித்து வாலிபர் சங்க அமைப்பினர் சீர்வரிசை தட்டுடன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று(மார்ச் 19) மனு அளித்தனர்.

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் படிப்பக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த படிப்பக கட்டிடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா 2016 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கபட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை திறப்புவிழா செய்யப்படவில்லை. இதுகுறித்து வாலிபர் சங்கம் பல முறை மனுவளித்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்,திறப்புவிழாவிற்கு தேதி குறிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று புத்தகங்களை தட்டில் வைத்து சீர்வரிசையோடு மாவட்ட ஆட்சியரிடம் நூதனமாக மனு அளிக்க வந்தனர்.இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ்,பொருளாளர் சீலாராஜ், நிர்வாகிகள் நிசார்அகமது,பாலு,விஜய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

மேலும் படிக்க