• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர் – போலீசார் விசாரணை

August 14, 2021 தண்டோரா குழு

கோவையில் 23 வயது பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய 27 வயது வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சுக்கரவார்பேட்டை பகுதியில் பேக்கரி நடத்தி வரும் 27 வயது ஆண், சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 வருடங்களாக காதலர்களாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதும், தங்குவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி அந்த வாலிபர் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதனிடையே அந்த பெண் திருமணம் செய்ய வற்புறுத்திய போது அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் படிக்க