• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர் – போலீசார் விசாரணை

August 14, 2021 தண்டோரா குழு

கோவையில் 23 வயது பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய 27 வயது வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சுக்கரவார்பேட்டை பகுதியில் பேக்கரி நடத்தி வரும் 27 வயது ஆண், சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 வருடங்களாக காதலர்களாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதும், தங்குவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி அந்த வாலிபர் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதனிடையே அந்த பெண் திருமணம் செய்ய வற்புறுத்திய போது அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் படிக்க