• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணமான புதுப்பெண் நகைகளுடன் தப்பியோட்டம்

January 4, 2017 தண்டோரா குழு

நொய்டாவில் புதுமண பெண் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நொய்டா காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை(ஜனவரி 4) கூறியதாவது:

புதுதில்லியை அடுத்த நொய்டா நகரில் மனு என்பவருக்கும் கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் ஃபைரோஸாபாத் நகரில் திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்துக்காக இடைத் தரகருக்கு மனு ரூ. 1 லட்சம் கொடுத்திருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் லத்தீப்பூர் என்னும் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கீதாவை அவளுடைய பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கீதாவை அழைத்துச் சென்றனர். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

செவ்வாய்க் கிழமை கீதாவை அழைத்து வருவதற்காக மனு அவளுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு யாரும் இல்லை. மனு கீதாவுடனும் அவர்களது உறவினர்களுடனும் பேசுவதற்காக கைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவர்களது கைபேசி எண்கள் அணைக்கப்பட்டிருந்தன.

அதிர்ச்சி அடைந்த மனு உடனே அருகில் இருந்த தன்கௌர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கீதா மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்வோம்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க