• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதி விபத்து..! – 6 பேர் உயிரிழப்பு

March 19, 2020

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சேலத்தில் உள்ள பிரபல விநாயகர் மிஷன் குழுமத்தின் பாரா மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் உதகைக்கு சுற்றுலா சென்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பழங்கரை என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் சின்னாபின்னமாகி, காருக்குள் இருந்த மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் காரில் பயணித்த ராஜேஷ் (21), சூர்யா (21) வெங்கட் (21), இளவரசன் (21) வசந்த் (21) ஆகிய 5 மாணவர்களும் கார் டிரைவரும் உயிரிழந்தனர்.

பலியான மாணவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சந்தோஷ், கார்த்தி ஆகிய 2 மாணவர்களும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாரா மெடிக்கல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் இந்த மாணவர்கள், கொரானா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்ற போது இந்த சோக விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் படிக்க