• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு

March 20, 2020

144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வதந்திகளை பரப்ப வேண்டாம் என முகநூல் மூலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக திருப்பூரில் நாளை முதல் 144 தடையுத்தரவு அமல்படுத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது பொதுமக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக குழப்ப சூழ்நிலையும் திருப்பூரில் நிலவியது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில் திருப்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கபடவில்லை எனவும், இதுபோன்ற தேவையற்ற வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறுப்புள்ள குடிமகனாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க