• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா

April 18, 2020 தண்டோரா குழு

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. இதில், திருப்பூரில் அதிகமாக 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள், கொரோனாவால் தனிமைபடுத்தப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

ஏற்கனவே திருப்பூரில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 108 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,சென்னையில் 7 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், திண்டுக்கல்லில் 3 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், நெல்லையில் இருவருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும், கோவையில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க