• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கை பிரித்திகா யாசினி தர்மபுரியில் பணியமர்த்தப்பட உள்ளார்

April 1, 2017 தண்டோரா குழு

சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராக தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளராக சேலத்தை சேர்ந்த பிரித்தியா யாசினி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

சுமார் ஒரு ஆண்டு காலமாக அவர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று( மார்ச் 31) பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

நிறைவு விழாவில் அவர் பேசுகையில் “ காவலர்கள் பொதுமக்களுடன் அக்கறையாக நடந்து கொள்ள வேண்டும்” என பயிற்சி பெற்ற காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருநங்கையான பிரித்திகா யாசினி தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க