• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை –உயர்நீதிமன்றம் உத்தரவு

April 4, 2017 தண்டோரா குழு

சென்னையில் திருநங்கைகளுக்காக தனி கழிப்பறை அமைக்கும்படி மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் பல இடங்களில் மறுக்கப்படுகிறது. தனிக்கழிப்பறை இல்லாததால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை அமைக்க உத்தரவிடக் கோரிசென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜ்என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்தவழக்கு, பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், சமூக நலத்துறை இயக்குநர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தண்டையார்பேட்டை, சைதாப்பேட்டை, சூளைமேடு, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில், திருநங்கைகளுக்கு தனிக்கழிப்பறை அமைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கழிப்பறைகள் அமைக்கவும், அது தொடர்பாக சமூக நலத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் அறிக்கை தாக்கல் செய்யவும் 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க