June 11, 2020 தண்டோரா குழு
தியாகி குமரன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா? கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், தியாகி குமரன் மார்க்கெட்டில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி,ஆக்கிரமிப்பு கடைகள் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலார் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்தார். அப்போது, காவல்துறை துணை ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு) எல்.பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும், கூட்டம் அதிகம் கூடும் கோவை மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில் முக கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் களஆய்வு மேற்கொண்டார்.