• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

August 8, 2018 தண்டோரா குழு

ராஜாஜிஹாலில் வைக்கப்பட்ட மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, வைகோ, முத்தரசன், ராமதாஸ், திருமாவளவன், நடிகர்கள் ரஜினி, கமல், சிவக்குமார், சூர்யா, டி.ராஜேந்தர், அஜீத், வடிவேலு, சரோஜாதேவி தினகரன் மற்றும் அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்களான வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதைபோல், கருனாநிதிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் அவரது உடல் மீது ராணுவத்தினர் தேசிய கொடியை போர்த்தினர். மேலும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமை செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

மேலும் படிக்க