• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினமும் 1000 பேருக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை

November 10, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், பருவமழை தாக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி பகுதிகளில் தினமும் 1000 பேருக்கு சளி, காய்ச்சலி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள்தோறும் பொது இடங்கள், வார்டு பகுதிகளில் 1000 பேரிடம் சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க