• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு சீறி பாய்ந்த காளைகள்

February 4, 2017 தண்டோரா குழு

திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடைபெறும் இந்நிகழ்ச்சி தடை காரணமாக கடந்த மூன்று வருடமாக நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதையடுத்து அதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவில் காளைகளுக்குப் பாரம்பரிய முறைப்படி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பிடித்தனர். காளைகளைப் பிடித்த வீரர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க