• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவறாக செயல்படும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

June 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தவறாக செயல்படும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.140 மற்றும் அதற்கான 18% ஜி எஸ் டி வரியை சேர்த்து ரூ.165 க்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களை வழங்கி வருவதோடு மட்டுமல்லாமல், ஒளிபரப்பிற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸை இலவசமாக வழங்கி வருகிறது.

அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர்கள் விருப்பமில்லாமல், தங்களின் சுயலாபத்திற்காக சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அரசு செட்டாப் பாக்ஸ் மாற்றினாலோ அல்லது அரசு சிக்கல் வராது என்று தவறான தகவல்களை தெரிவித்து அரசு சந்தாதாரர்களை தனியார் சந்தாதாரர்களாக மாற்ற முற்பட்ட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்க 0422 – 2522886 மற்றும் 18004252911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க