• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலையில் கல்லை போட்டு ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை

January 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பச்சாபாளையம் ஊராட்சியை சேர்ந்த நாதேகவுண்டன்புதூரில், ஊருக்கு ஒதுக்குப்புறமான சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில்,அதே ஊரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜ் (56) இறந்து கிடந்தார்.

அவர் உடலுக்கு அருகே காலி மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஆகியவை கிடந்தன. அவருடைய தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி காயங்கள் இருந்தன. மேலும் தாக்க பயன்படுத்தப்பட்ட கல் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் முதல்கட்ட விசாரணை இருசக்கர வாகனத்தில் மற்றொருவருடன் வந்து இங்கு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இறந்த நடராஜ் சூலூரை சேர்ந்த ஒருவரிடம் கூலிக்கு ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். சம்பவ இடத்தில் மேட்டுப்பாளையம் போலீஸ் டிஎஸ்பி பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் கோவையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். இரு நபர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க