• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலாய் லாமாவுடன் சர்வதேச நேருக்குநேர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாணவி

November 4, 2020 தண்டோரா குழு

கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் 12வது வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி சுந்தரராஜன் என்ற மாணவி, தலாய் லாமா வுடன் நடந்த நேருக்கு நேர் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மாணவி பங்கெடுத்ததை தனது மகிழ்ச்சியான தருணம் என்று பள்ளி நிர்வாகம் அறிவிக்கின்றது. இந்த இணையதள நிகழ்ச்சி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண் டேஷன் சார்பில் அப் துல்கலாமின் 89வது பிறந்த தினவிழாவை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டது.

இதில், வாழ்வதற்கேற்ற கிரகம் பூமி மற்றும் அமைதி யான ஒரு உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து செயலாற்றுதல் என்ற தலைப்பில் மாணவி ஸ்ரீநிதி சுந்தர்ராஜன் பேசினார். டாக்டர் அப்துல்கலாம் கூறியதை மேற்கோள் காட்டி, இதே வேகத்தில் சென்றால் உலகமானது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மட்டும் தான் நிலைத்து நிற்கும் என்ற கருத்தை அவர் பேசினார்.
தலாய்லாமா பேசுகையில், ஒவ்வொருவ ருக்குள்ளும் இருக்கும் அமைதியே உலகத்தை சிறப் பானதாக்கும்` என்றார்.

மேலும் படிக்க