• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

August 7, 2022 தண்டோரா குழு

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கோவை செல்வபுரம் போலீசார் கடந்த 2ம் தேதி இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு மாநில செயலாளர் பிரசன்ன சுவாமிகள் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 3 ம் தேதி பிரசன்ன சுவாமிகள்,தனது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் 11 வயது மகள் உள்ளிட்டோருடன் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவரது தாயார் கிருஷ்ணகுமாரி அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் மூன்று பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி பிரசன்ன சுவாமிகள் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க