• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

August 7, 2022 தண்டோரா குழு

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் மோசடி செய்ததாக கோவை செல்வபுரம் போலீசார் கடந்த 2ம் தேதி இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு மாநில செயலாளர் பிரசன்ன சுவாமிகள் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 3 ம் தேதி பிரசன்ன சுவாமிகள்,தனது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் 11 வயது மகள் உள்ளிட்டோருடன் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவரது தாயார் கிருஷ்ணகுமாரி அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் மூன்று பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி பிரசன்ன சுவாமிகள் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க