• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தர்பார்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை தமிழகம் முழுவதும் 4 நாட்கள் திரையிட அரசு அனுமதி

January 8, 2020 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை 4 நாட்கள் நடத்திக் கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தர்பார் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகள் நாளை மற்றும் நாளை மறுநாளும், வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும் கூடுதலாக ஒரு காட்சியாக சிறப்புக் காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க