• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தரைப்பாலம் குழிக்குள் இறங்கிய கனரக லாரி – கடும் போக்குவரத்து பாதிப்பு

November 10, 2022 தண்டோரா குழு

கோவை தெலுங்குபாளையம் வாய்க்கால்பாலம் சோதனை சாவடி அருகே, கோழி தீவனத்தை ஏற்றி கொண்டு வந்த கனரக வாகனம், அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைப்பாள குழியில் இறங்கியதால், அதிலிருந்து மீள முடியாமல் சிக்கியது. இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தினால், அவ்வழியாக பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்வோர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக 2 கிலோ மீட்டர் அளவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துகளை விட்டு சாலையில் நடந்து செல்லும் அவலமும் நடந்து வருகிறது.

புல்டோசர் மூலம் தரைப்பால குழியில் இருந்து வாகனத்தை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, வாகனத்திலிருந்து பொருட்களை இறக்கி வைக்கும் பணியும் நடைபெறுகிறது.தரைப்பாலம் பணிக்காக, மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யவில்லை, செய்திருந்தால் எவ்வித பிரச்சனையும் இன்றி பொதுமக்கள் சென்று வர ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க