• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் – பிரகாஷ் ஜவடேகர்

June 18, 2018 தண்டோரா குழு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா,நவோதயா,அரசு உதவி பெறும் பள்ளிகள்,அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள்,சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப,உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதுவரை 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்து வந்தது.

இதற்கிடையில்,தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது.இந்தி, ஆங்கிலம்,சமஸ்கிருதம் மொழிகளில் தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்திருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார்.தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் நடத்த சிபிஎஸ்இக்கு பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மொழி நீக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.4 மாதங்களில் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மூன்று மொழிகளில் எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க