• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மைய வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி திறப்பு விழா

September 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மைய வளாகத்தின் தென்மேற்கு மூலையில்மிக முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓட்டுநர் ஓய்வு அறை கட்டிடம் ரூ.239.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7922.00 சதுரஅடி. இதில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் ஒவ்வொரு தளத்தில் கட்டட பரப்பளவு 1984.00 சதுரஅடி ஆகும்.கட்டடம் தரைத்தளத்தில் பார்வையாளர் அறை, சமையல் அறை, அலுவலகம் கவனிப்பாளர் அறை மற்றும் ஒட்டுநர் அறைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களை கொண்டு கட்டப்பட்டு ஒவ்வொருதளத்திலும் முறையே இரண்டு தங்கும் அறையுடன் கூடிய உணவு அறை மற்றும்கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி முனிஸ்வர் நாத் பந்தாரி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிஷ் உபத்ய, ஜி.ஆர். சுவாமிநாதன்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை நீதிமன்ற முதன்மை நீதிபதி ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட முதன்மை மாஜிஸ்ரேட் சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க