• Download mobile app
29 May 2025, ThursdayEdition - 3396
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணம்

January 24, 2020

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணமாக கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழக சுற்றுலா துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் சுற்றுலா பயண திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக இன்று காலை 8 மணியளவில் , பள்ளி மாணவ மாணவிகள் 150 பேரை மூன்று பேருந்தில் ஈஷா யோகா மையம் , பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வேளாண் பல்கலைக்கழகம் மியூசியம் மற்றும் வ. உ .சி பூங்கா , அரசு அருங்காட்சியகம் ஆகிய 5 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தப் பயணத்தை கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரி அய்யண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் படிக்க