• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு உயர்கல்வி துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது – அமைச்சர் அன்பழகன்

February 26, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைகழக 35 வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.இந்த பட்டமளிப்பு விழாவில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை,டிப்ளமோ மற்றும் முனைவர் படிப்புகளை முடித்த 88762 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு படலடங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்,

தமிழ்நாடு உயர்கல்வி துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. 18 வயது முதல் 23 வரை உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிகை தமிழகத்தில் அதிகம். 2020 ஆம் ஆண்டு உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில் , 2017- 2018 ஆம் ஆண்டு அறிக்கையின் படி தமிழகத்தில் 48.6 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் 21.8 சதவிகிதம் தாழ்தப்பட்ட மக்கள் உயர் கல்வி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 42.1 சதவிகிதம் தாழதப்பட்ட மக்கள் உயர்கல்வி படித்துள்ளதாக கூறினார்.

மேலும், 15.9% பழங்குடியினர் உயர் கல்வி பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் 40.5 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெற்றுள்ளனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 13 வது இடத்தில் பாரதியார் பல்கலை கழகம் இருக்கின்றது. தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மூலம் 125 கோடி மதிப்பிலான நுணுக்கமாக ஆய்வு மையம் நிறுவதற்கு 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அதில் ஒரு மையம் பாரதியார் பல்கலை கழகம் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் படிக்க