• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக விவசாய சங்கத்தினர் தாம்பூலம் தட்டோடு வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்

April 16, 2018 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகவும்,அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி தமிழக விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 24 மணி நேரமும் நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.மக்கள் போராட்டங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில்,ஹோட்டல்கள், தாபாக்கள், விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். மது விற்பனையை தடுக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் காவல் துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெறுவதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில் விவசாயிகள் வெத்தலை பாக்கு,பழங்களை தாம்பூலத்தில் எடுத்து வந்து மரியாதையுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் படிக்க