• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக விவசாய சங்கத்தினர் தாம்பூலம் தட்டோடு வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்

April 16, 2018 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகவும்,அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி தமிழக விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 24 மணி நேரமும் நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.மக்கள் போராட்டங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில்,ஹோட்டல்கள், தாபாக்கள், விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். மது விற்பனையை தடுக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் காவல் துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெறுவதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில் விவசாயிகள் வெத்தலை பாக்கு,பழங்களை தாம்பூலத்தில் எடுத்து வந்து மரியாதையுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் படிக்க