• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு

March 24, 2017 தண்டோரா குழு

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சந்தித்தனர்.

தமிழக விவசாயிகள் தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை, நடிகர்கள் விஷால் ,பிரகாஷ் ராஜ், கார்த்தி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரவித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

கடந்த சில நாட்களாக விவாசயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு நடிகனாக பத்து விவசாயிகளின் கடனை தீர்க்க முடியும் ஆனால், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் துயர் துடைக்க அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில்,

தமிழக விவசாயிகள் பாரபட்சத்துடன் பார்க்கப்படுவதாகவும், விவசாயிகள் பிரச்னை சம்பந்தப்பட்டவர்களுக்குச் செல்லும் வகையில் அந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க