• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக விவசாயிகள் சேலை கட்டி போராட்டம்

April 14, 2017 தண்டோரா குழு

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலையை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்கடன் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் 32 வது நாட்களாக பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன், ஒருபகுதியாக விவசாயிகள் இன்று சேலையை அணிந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது, பிரதமர் மோடி விவசாயிகளை பார்ப்பது இல்லை ஆனால் சேலை கட்டி வரும் பெண்களை மட்டுமே பார்த்து அவர்களின் குறைகளை கேட்கின்றார் என விவசாயிகள் குற்றச்சாற்றினர்.

மேலும், விவசாயிகள் சேலை கட்டிக்கொண்டால் வந்து பார்ப்பார் என கூறி சேலை கட்டி போராட்டம் நடத்தி வருவதாக அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க