• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வரை சந்திப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா

January 31, 2018 தண்டோரா குழு

தமிழக முதல்வரை சந்திப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல்லாண்டு காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை முடித்து, 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 9-ந் தேதி அறிவித்தது.

இதற்கிடையில், டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நாள் மற்றும் நேரம் ஒதுக்க, முதலமைச்சர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா,

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒருவாரத்திற்கு பிறகு முடிவு செய்யபடும்.  கர்நாடக மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதால், ஒரு வாரத்திற்கு பிறகு,  பழனிசாமியை சந்திப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும் படிக்க