• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொங்கு மண்டல தேவேந்திர குல வேளாளர் மக்கள் மாநாடு நடத்த முடிவு

December 14, 2020 தண்டோரா குழு

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொங்கு மண்டல தேவேந்திர குல வேளாளர் மக்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்த உள்ளதாக அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பட்டியல் இனத்தில் உள்ள 7 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று பொதுப்பெயரிடக் கோரி நீண்ட காலமாக தேவேந்திர குல மக்கள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் ஏழு உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிடவும், இதற்கான உத்தரவை அரசு விரைவில் பிறப்பிக்கும். இதற்கான மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் உத்தரவைப்பெற உரிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆலோசணை கூட்டம் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை எதிரில் உள்ள ஆதி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. பேரவையின் நிறுவன தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இதில்,தீபம் முனியப்பன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்,மற்றும் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ,உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தேர்தலுக்கு முன்னர் இதற்கான அரசாணையை வெளியிடும் பட்சத்தில் கொங்கு மண்டல தேவேந்திர குல வேளாளர் மக்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்த உள்ளதாக மனு நீதி சோழன் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் சதீஷ் மள்ளர், சிவகுரு பார்த்திபன் பாபு மகேஷ் மதன் தீனா கார்த்திக் உத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க