• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சாந்தா ஷீலா விலகல்

February 7, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வது தொடர்கிறது. அந்த வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த சாந்தா ஷீலா நாயர் தனது சொந்த காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, சாந்தா ஷீலா நாயரைத் தனிப்பிரிவு அதிகாரியாக நியமித்தார்.

மேலும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் பணிகளைக் கவனிக்கும் தனி அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க