• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக – கேரள எல்லையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு காட்டு யானைகளை சுட்டு கொன்ற இருவர் கைது

February 27, 2019 தண்டோரா குழு

தமிழக – கேரள எல்லையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு காட்டு யானைகளை சுட்டு கொன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தமிழக – கேரள எல்லையான பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மணலியம்பாடம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு காட்டு யானைகள் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு அப்பகுதி கிராம மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜபீர், மற்றும் பிஜூ என்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்திற்காக யானைகளை சுட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க