• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு ஆழியார் பிரச்சனையில் சுமூக முறையில் நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் எஸ் பி வேலுமணி

February 27, 2018

ஆழியார் பிரச்சனையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு சுமூக முறையில் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி செயின் அணிவித்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிறுவாணியில் கேரளா அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தமிழக முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறிய அவர், விலங்குகளின் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் ஆழியாரில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கும் சிறுவாணி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்ட அவர், அரசியல் காரணமாக இந்த இரண்டு விவகாரங்களையும் இணைத்து பேசுவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆழியார் பிரச்சனையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சுமூக முறையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க