July 6, 2019
தண்டோரா குழு
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என நீட் விலக்கு மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் பெற உத்தரவிடும் வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.